கிளிநொச்சி மாவட்ட புதிய அரசாங்கதிபர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபராக எஸ்.முரளீதரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய றூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்ற நிலையில்  மேலதிக  அரசாங்கதிபராக பணியாற்றி வந்த எஸ்.முரளீதரன் பதில் அரசாங்க அதிபராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் 03.07.2024 நேற்று பிரதமர் தினேஷ் குணரத்தின அரச அதிபர் நியமனத்தினை வழங்கியிருந்தார்.
புதிய நியமனம் பெற்று கடமைகளை பொறுப்பேற்க வருகை தந்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், சிவில் அமைப்பினரும் இணைத்து பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் வரேவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews