சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரும் தமிழ் நாட்டு தலைவர்கள்

பெருந்தலைவர் சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் ஜூலை 7 திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அதில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதே நேரம் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனினும் இது வரையில் அது தொடர்பான உத்தியோக பூர்வ உறுதிப்படுத்தல்கள் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

”அண்ணாமலை, தாம் இறுதிக் கிரியைகளில் நேரில் பங்கேற்பார் என்பதைத் தொலைபேசி மூலம் தொலைபே உறுதிப்படுத்தினார்” என்று நாடாளுமன்றஉறுப்பினர்சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வருகைதரும் பட்சத்தில் தனி விமானத்தில் வேறு பல அரசியல் தலைவர்களும் அவருடன் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews