துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி மரணம்..!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய பொலிஸ் காவலரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம்  நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான பொலிஸ் அதிகாரியே சம்பவத்தில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews