இன்றும் சில ரயில்கள் ரத்து..! அதிபர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பு

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ள போதிலும், இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.

போக்குவரத்து அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews