யாழ்.போதனா வைத்தியசாலை பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக `O positive` இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குருதி வழங்கத் தகுதியுடைவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரில் சென்று இரத்த தானம் வழங்கி உதவுமாறு யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews