தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக CCTV  கமராக்கள்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக CCTV  கமராக்கள் pபொருத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அநுர கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட CCTV  கமரா மற்றும் இதர நவீன தன்னியக்க CCTV  கமராக்கள் பல அங்காங்கே பொருத்தப்பட்டு கூட்டங்களுக்கு வருபவர்கள் கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்.

அம்பாறை காரைதீவு மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் நேற்றையதினம் (12) தேசிய மக்கள் சக்தி கூட்ட மேடைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான CCTV கமராக்கள் பல பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, என்றும் இல்லாதவாறு கூட்டங்களுக்கு பைகளுடன் சமூகமளிப்பவர்கள் அழைக்கப்பட்டு விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கூட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews