பளை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா…!

கிளிநொச்சி மாவட்டம்  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பளை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா கல்லூரி மண்டபத்தில் அதிபர் தலமையில்  நேற்று வெள்ளிக்கிழமை 19/07/2924 சிறப்பாக இடம்பெற்றது.
இந்  நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் .சி.சிறிசற்குணராசா, திருமதி சி.சிறிசற்குணரஜா, சிறப்பு விருந்தினராக  பச்சிலைப்பள்ளி பிரதேச  செயலாளர் இ.த.ஜெயசீலன், கௌரவ விருந்தினராக கிளிநொச்சி வடக்கு வலய கல்வி பணிமனை   பிரதி கல்விப்பணிப்பாளர் நடேசபிள்ளை காந்தரூபன் மற்றும் அவரது துணைவியான ஶ்ரீமதி . சைலஜா காந்தரூபன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பல்துறைகளில் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கான பரிசில்களை  பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வழங்கி கௌரவித்தனர்.
இதில் முதல்  நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் இசை வாத்தியங்களுடன் மாலை அனுவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றத்துடன் நிகழ்வு ஆரம்பமானது தொடர்ந்து வரவேற்பு நடனம் வரவேற்புரையிடன் தேசிய மற்றும் மாகாண மட்டங்களிலும் பலதுறைகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசீல்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews