தமிழ் தேசிய கட்சிகளுக்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு  ஒப்பந்தம் சற்றுமுன் கைச்சாத்து…!

தமிழ் தேசிய கட்சிகளுக்கும், தமிழ் மக்கள் பொதிச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு  ஒப்பந்தம் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பொதுச்சபையின்  செயற்பாட்டாளர் பேராசிரியர் K.T. கணேசலிங்கம்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கட்சிகள் சார்பில். பாராளுமன்ற உறுப்பினரும். தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்  செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சிகள் சார்பில் அதன் தலைவர் வேந்தன்,  பசுமை தேசிய இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஐங்கரநேசன், தமிழ் தேசிய  கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்தா. புளொட்  சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர்  கையொப்பமிடப்பட்டனர்.

தமிழ் மக்கள் பொதுச் சபை சார்பில்  பேராசிரியர் கே ரீ கணேசலிங்கம்,  அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான  சி.ஆ.யோதிலிங்கம். அரசியல் விமர்சகர் நிலாந்தன், திரு.வசந்தராசா, ஆய்வாளர் யசீந்திரா உட்பட பலரும் கையொப்பமிட்டுள்ளனர்.
தந்தை செல்வா அரங்கில்  காலை 11:30  மணியளவில் ஆரம்பமாகி இடம் பெற்றுவரும் குறித்த நிகலபப்வில்  அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,  தமிழ் மக்கள் பொதுச்சபைகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews