கடற்றொழிலாளர்களுக்காக சேவையாற்றியோர் கௌரவிப்பு….!(வீடியோ)

வடக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர் நலன்களுக்காக நீண்டகாலமாக சேவையாற்றியவர்கள் நேற்றைய தினம் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினரால் சமாச மண்டப்த்தில்  கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு பிரான்சிஸ் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிஸ் குரஸ் யாழப்பாண மாவட்ட இணைப்பாளர் நா.இன்பநாயகம், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆ.சதீஸ் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சி.பிரதாஸ், வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மாவட்ட யாழ்ப்பாணம் மாவட்ட தலைவர் இ.முரளீதரன், கிளிநொச்சி மாவட்ட தலைவர் திரு.அமலதாஸ், முல்லைத்தீவு மாவட்ட தலைவர் திரு. நடனலிங்கம், மன்னார் மாவட்ட தலைவர் திரு.டேவிட், கிளிநொச்சி தலைவரும் இணையத்தின் உப தலைவருமான ஜோசப் பிரான்சிஸ், இணையத்தின் முன்னாள் தலைவர் திரு.அச்சுதன், நீண்டகால செயற்பாட்டாளர்களான திரு.அந்தோணி, கிளிநொச்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் இணைய தலைவர் திரு.சந்திர  மோலீசன், முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அமலோத்தபவம், முல்லைத்தீவு சேர்ந்த திரு. அன்ரணி  தற்போதைய வட மாகாண இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம், செயலாளர் முகமட் ஆலம், பொருளாளர் இர.பிரியா மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேமன் குமார, நீர்கொழும்பு சிறிவிமுத்தி பெண்கள் அமைப்பு தலைவி செல்வி சுபாஜினி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் வடமாகாண கடற்றொழிலாளர் இணைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பணியாளர்கள், தேசிய. மீனவ ஒத்துழைப்பு இயக்க நிர்வாகிகள் பணியாளர்கள் என பலரும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews