தமிழ் மக்கள் இனப் பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வே அவசியம் ; நாகரிகமான நாடுகள் சமஷ்டியை  ஏற்றுக் கொண்டன – வட மாகாண இணப்பாளர் ஜான்சன் தெரிவிப்பு!

நாகரிகமான நாடுகள் சமஸ்டியை தீர்வாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு சமஸ்டி தீர்வே வேண்டுமென வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வட மாகாண ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான தீர்வையே முன்வைக்க வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது.
அந்தப் பிரகடனத்தை தமிழ் அரசியல் தலைமைகள் பல ஏற்றுள்ள நிலையில் எமது மக்கள் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டு இரண்டாவது வருட நிறைவு நாளில் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தோம்.
உலகில் பல இனங்கள் உள்ள நாட்டில் சமஸ்டி கோரிக்கையை நிறைவேற்றி நாகரிகமாக நாடுகளாக காணப்படுகின்ற நிலையில் இலங்கையிலும் தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெற்று வாழ்வதற்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம்.
எமது சமஸ்டி மக்கள் பிரகடனத்தை தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல்வேறு வேலை திட்டங்களை செயற்படுத்த உள்ளோம்.
அதில் ஒரு அங்கமாக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி சமஷ்டிப் பிரச்சாரத்தை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் இடம் பெற்று வருகின்றன.
ஆகவே இலங்கை தீவில்  அதிகமாக தமிழ் மக்கள் வாழ்கின்ற வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பாக சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்பு வைத்துள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  அவர் மேலும் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews