கிளிநொச்சியில் இடம் பெற்ற தமிழ் பொது வேட்பாளர் அறிமுக கூட்டம்…!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டதமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்க்காக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களை  தமிழ் பொது வேட்பாளராக அறிமுகம் செய்யும்  கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை 10/08/2024 கிளிநொச்சி கூட்டுறவு மண்டப்த்தில் காலை 10:00 மணியளவில் ஆரம்பமாகியது.
இதில் இலங்கை தமிழரசு கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மற்றும் அரசியல் பிரதிநிதிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பில் பலரும் கலந்துகொண்டு உரைகளை நிகழ்த்தினர்.
கிளிநொச்சி குடிசார் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த குறித்த கூட்டத்தில் 400 க்கு மேற்ரபட்ட குடிசார் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குறித்த சந்திப்பின் முடிவில் மக்கள் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கப்பட்டது. பொதுமக்கள் கேள்விகளை கேட்டார்கள். கேள்விகளுக்கு தமிழ் மக்கள் பொதுச்சபை பிரதிநிதிகளால் விளக்கம் தரப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews