I V மகாசேனனின் இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் நூல் வெளியீடு இன்று …! 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், முதுகலை  மானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழாஇன்று   பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் தலமையில் இடம் பெறவுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி சி ரகுராம் அவர்களும், சிறப்பு விருந்தினராக சிவபூமி அறக்கட்டளைகள் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன்,  அவர்களும் கலந்து கொள்ளவுள்ளதுடன் நூல் அறிமுக  உரையினை அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளருமான சி.அ.யோதிலிங்கம் நிகழ்த்தவுள்ளதுடன், ஆயவுரையினை சமூக அரசியல் விமர்சகர் ம.நிலாந்தனும் நிகழ்த்தவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews