A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த  குளிரூட்டப்பட்ட பேருந்து மோதியதில்  நடந்து சென்ற ஒருவர் சம்வ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் A9 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வீதியால் நடந்து சென்ற நபர் ம
வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்தபோது பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை விட்டு விலகி நிற்குமாறு பேசி விட்டு பேருந்தை எடுக்க முற்பட்டபோது குறித்த நபர் கால் தடக்கி வீழ்ந்த போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்து தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் பரந்தன் பகுதியைச்சேர்ந்த 40வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews