பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சார திட்டமிடல் கூட்டம்…!

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கான பரப்புரை கூட்டம் மேற்கொள்வது தொடர்பான கூட்டம் தனியார் விடுதி  ஒன்றில்  நேற்று இடம் பெற்றுள்ளது.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ல,  கட்சி சார் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றிய இக் கூட்டத்தில் .முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் இடம்பெற்றது

பிரச்சாரப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாகவும், ஒரு பெரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. நாளைய தினம்  செவ்வாய்க்கிழமை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பிரச்சாரப் பணிகளை தீவிரமாக முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பகுதியிலும், தீவக பகுதிகளிலும் பரப்புரை பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 

Recommended For You

About the Author: Editor Elukainews