வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை 30/08/2024  நடாத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் , கறுப்புத் துணியால் வாயைக்கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் துவாரகன், பல்கலைக்கழக ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன், கலைப்பீட மாணவர் ஒன்றியம் தலைவர் நெவில்குமார், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விதுசன், விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews