பருத்தித்துறை தம்பசிட்டி சர்வோதய முன்பள்ளி மழலைகள் கண்காட்சியும் சிறுவர் சந்தையும்..!

பருத்தித்துறை தம்பசிட்டி சர்வோதய முன்பள்ளி மழலைகள் கண்காட்சியும் சிறுவர் சந்தையும் நேற்று 06.09.2024 இடம்பெற்றது.

முன்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்

இதில் மாணவர்கள் தமது வீட்டுத்தோட்டத்தில் விளைவித்த காய்கறிகள்,தேங்காய், கீரை வகைகள்,பழங்கள்,கைப்பணிப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை தமது அழகிய கண்காட்சி பொருட்களையும் காட்சிப்படுத்தினர்.

இதில் பெற்றோர்கள் பாடசாலை மாணவர்களும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews