தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பூரண ஆதரவு!

தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் கடந்த  07/09/2024  சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திபின்போது சம்மேளன நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர்.

இதன்போது, திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த யதீந்திரா உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews