
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் இந்த வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.





அந்தவகையில் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை, வாக்குச் சாவடிகள் அமைப்பதற்காக அந்தக் கிராமத்துக்கு பொறுப்பான கிராம சேவகர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றது.
அதனடிப்படையில் யாழ்ப்பணம் அராலி வள்ளியம்மை வித்தியாலயமானது, வாக்குச் சாவடி அமைப்பதற்காக ஜே/160 கிராம சேவகர் திரு.சிந்துஜனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.