யாழில் மனவிரக்தியில் பிரான்ஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழில், மனவிரக்தியடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் உயிர்மாய்த்துள்ளளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இவரது 3 பிள்ளைகள் மூன்று பேர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். மன விரக்தியில் இருந்த இவர் தவறான முடிவெடுத்து  உயிர்மாய்த்துள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews