சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதியோர் தின நிகழ்வு இன்று…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதியோர் தின நிகழ்வுகள் இன்று காலை 9:30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெறவுள்ளது.
ஓய்வு பெற்ற முன்னாள் மேலதிக அரச அதிபர்
திரு. ஶ்ரீநிவாசன் தலமையில் இடம் பெறவுள்ள நிகழ்வில்  தொண்டைமானாறு பகுதியில் உள்ள  70 ஆண், பெண் முதியோர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதில்  வடலியடைப்பு இந்து இளைஞர் மன்ற அற நெறிப் பாடசாலை மாணவர்களின்,
வரவேற்பு  நடனம், வில்லிசை நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளதுடன்
ஓய்வு பெற்ற விரிவுரையாளர்
அ.குமாரவேல், ஓயவு பெற்ற ஆசிரிய ஆலோசகர்
திருமதி. சிவனொளிபாதம்,  யாழ் மாவட்ட இளைஞர் சேவை மன்ற உதவி பணிப்பாளர் திருமதி வினோதினி ஆகியோரது கருத்துரைகளும் இடம் பெறவுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews