சந்நிதியான் ஆச்சிரமத்தால்  நோயால் பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு ரூபா 260,000 பெறுமதியான  வாழ்வாதார உதவி…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி –  கோணாவில் கிழக்கை சேர்ந்த  இரண்டு சிறுநீரகங்களும்  பாதிக்கப்பட்ட  குடும்பம் ஒன்றிற்க்கு  வாழ்வாதார உதவியாக விவசாயம் மேற்கொள்வதற்க்கு ரூபா 260000/- பெறுமதியான  ஆழ்துளைக்  கிணறு ஒன்று அமைப்பதற்க்கான நிதியுதவி நேற்று வியாழக்கிழமை 10/10/2024 வழங்கப்பட்டதுடன் சுபநேரத்தில் ஆழ் துளைக்கிணறு அமைப்பதற்க்கான ஆரம்ப வேலைகளும் இடம் பெற்றது
இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையிலான தொண்டர்கள் நேரடியாகச் சென்று வழங்கிவைத்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews