இந்திய இராணுவத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளது நினைவேந்தல்…!

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரின் படுகொலை செய்யப்பட்ட உறவுகளது 37வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம், வைத்தியசாலைக்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள், பொதுமக்களின் உறவுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews