
காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்தும், மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வானது 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.


பி.ப 3.00 மணியளவில் பட்டதாரி கற்கை நிலையம் – யாழ்ப்பாண கல்லூரியில் (யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக), பேராசிரியர் எஸ்.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
மறைந்த கவிஞர் எழுதிய ஏழாவது படைப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. இந்த நூலானது உயர்தர வகுப்பில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்குரியது ஆகும்.