
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் பிரதேச மட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 15.03.2025 அன்று ஆரம்பமாகும் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கின் தெரிவு செய்யப்பட்ட மைதானங்களில் தொடர்ந்து இடம்பெறவுள்ளது
கரப்பந்து,எல்லே,மென்பந்து,உதைபந்து,கபடி,மெய்வல்லுனர் போன்ற மேலும் பல போட்டிகள் ஆண்,பெண் இருபாலருக்கும் இடம்பெறவுள்ளது
விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பான கடிதம் வடமராட்சி கிழக்கின் அனைத்து கழகங்களுக்கும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.