கடலில் விழுந்த வெளி இணைப்பு இயந்திரம் மீட்பு..!

படகில் இருந்து நேற்று (18) தவறி விழுந்த வெளி இணைப்பு இயந்திரம் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வெளி இணைப்பு இயந்திரம் நேற்று (18) எதிர்பாராத விதமாக தவறி கடலில் விழுந்து காணாமல் போனது
மாலை மீன்பிடி நடவடிக்கைக்காக கடலில் பயணித்த வேளை சீரற்ற கடல் அலைகளால் படகில் இருந்த 40 குதிரை வலுவுடைய வெளி இணைப்பு இயந்திரம் இவ்வாறு  தவறி கடலில் விழுந்தது
தவறி விழுந்து காணாமல் போன வெளி இணைப்பு இயந்திரத்தை தேடும் பணியில் கட்டைக்காடு மீனவர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை (19) குறித்த இயந்திரம் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews