யூடியூப்பர் கிருஷ்ணாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

YouTuber கிருஷ்ணாவை எதிர்வரும் 02.04.2025வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த YouTuber தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த YouTuber கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டார்.

விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் கடந்த 10.03.2025 அன்று அவரை மல்லாகவிளக்ம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இந்நிலையில் அவரை இன்றுவரை (19) மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
பின்னர் அவர் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை எதிர்வரும் 02.04.2025 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews