பருத்தித்துறை போலீஸ் பிரிவில் 350 கிலோ கஞ்சா மீட்பு, அதன் பெறுமதி 6 கோடிக்கு மேல்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை போலீஸ் பிரிவில் 350 கிலோகிராம் கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ  புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர்  பிரியந்த அமரசிங்க தலமையில் இராணுவ புலனாய்வுத்துறையுடன் இணைந்து 350 கிலோகிராம் கஞ்சா பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கஞ்சா கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் இலங்கை பெறுமதி சுமார் 60 மில்லியன் ரூபா வரையென தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews