
வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை (27) காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில் ஆரம்பமாகி இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதில் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக மக்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் வடமராட்சி கிழக்கு பிரதேச பொது அமைப்பு பிரதிநிதிகள், அரச திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்