
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதிகளில் ஒளிப்பாய்ச்சி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6பேர் 5 படகுகளுடன் இன்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்
நேற்று (9) இரவு தொடக்கம் இன்று (10) காலை வரை வடமராட்சி கிழக்கு உடுத்துறை,ஆழியவளை,வெற்றிலைக்கேணி,சுண்டிக்குளம் ஆகிய நிலம் மற்றும் கடல் பகுதிகள் சமநேரத்தில் வெற்றிலைக்கேணி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்புக்குள்ளாகியது




கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடல் பகுதிகளில் பல படகுகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த கடற்பரப்புக்கு கடற்படையின் படகுகள் அனுப்பப்பட்டதுடன் காங்கேசன்துறையில் இருந்து அதிவிரைவு டோரா படகும் வரவழைக்கப்பட்டு குறித்த கடற்பகுதி சுற்றிவளைக்கப்பட்டது
இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் 5 படகுகளுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டு உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்