300 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்றையதினம் தீயிட்டு அழிக்கப்பட்டது. சென்ற வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல்... Read more »

கல்வி அமைச்சரின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம்,... Read more »

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க முன்மொழிவு!

தனியார் துறை பணியாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் திறந்த மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு தொழிலாளர்... Read more »

பொருட்களின் விலை குறைகிறதா?

பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ‘2024 வரவு செலவுத்திட்டம்’ கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்தார். ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின் வருமானத்தை அதிகரிக்க... Read more »

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிப்பு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (24.01.2024) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டது   கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆயர்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி... Read more »

நாடு முழுவதும் சீரான வானிலை

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்... Read more »

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் விபத்து – ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயம்!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின்... Read more »

ஆறு இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் ஆறு இந்திய பிரஜைகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீன்பிடி படகுகளை விரட்டியடிக்கும் நோக்கில், திங்கட்கிழமை (22-01-2024) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த... Read more »

2024/2025 வருடங்களில் க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம்!

2025ஆம் ஆண்டில் க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 2009.02.01ஆந் திகதி முதல் 2010.01.31ஆம் திகதி வரையான குறித்த காலப்பகுதியினுள் பிறந்த அனைத்து மாணவர்களினதும் விண்ணப்பப்படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து 2024.03.31ஆம் திகதிக்கு முன்னர் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மாகாண காரியாலயங்களுக்கு அல்லது... Read more »