படிப்படியாக குறைகிறது மழை

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து குறைவடையும் என வளிமண்டலவியல் திணைகள் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ... Read more »

வவுனியா – புளியங்குளத்தில் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றின் இருக்கைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் இன்று (13.01) தெரிவித்தனர். வவுனியா, புளியங்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது முல்லைத்தீவு... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் சந்திப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கும், மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் 12.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஊழியர் சங்கத் தலைவர் திரு.தங்கராஜா, இணைச் செயலாளர் திரு.த.சிவரூபன் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிற்கும், மாணவர்... Read more »

இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை தொண்டர்களுக்கு பொங்கல் பானை பொங்கல் பொருட்கள் வழங்கல்….

சிவனொளிபாதமலை சிவஈஸ்வர தேவஸ்தான திருடாதிபதியும் மற்றும் மஸ்கலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தான பிரதம குருவும் இத்தாலி ரெஜியோ எமிலியா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவஸ்தான பிரதம குருக்களும் ஆகிய சிவஸ்ரீ சி. சிவசங்கர் குருக்கள் Jp… அவர்களின் நிதிப் பங்களிப்பில் 28 தொண்டர்களுக்கு பொங்கல்... Read more »

இலங்கை முதல் உதவிச்சங்க தொண்டர்களுக்கு கெளரவிப்பு

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 ஆவது வருட பூர்த்தியும் அறநெறி எழுச்சி, மலையகம் 200 மாபெரும் ஆன்மீக கௌரவ விருது வழங்கும் மதிப்பளிப்பு பெருவிழா 2023.12.23 …. நிகழ்வின் போது இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை தொண்டர்கள்... Read more »

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம் நூல் வெளியீடு சிற்பாக இடம்பெற்றது

ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம் சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (13.01.2023) பிற்பகல் 3 மணிக்கு காவேரி கலா மன்றத்தின் இயக்குநர் வண. அருட்தந்தை ரி.எஸ்.யோசுவா  அவர்களின்... Read more »

யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலி – தொண்டமானாறு வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமை

யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலி – தொண்டமானாறு வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறித்த வீதி நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டது. அதனால் அந்த வீதி ஊடாக பலரும் சிரமங்களுக்கு மத்தியிலையே பயணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரங்களில் பெய்த... Read more »

உலக தமிழ் தலைவர்களின் பட்டியலில் செந்தில் தொண்டமான்!

உலக நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் கடந்த கால செயற்பாடுகளை தமிழக அரசு அவதானித்து அவர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அயலக தமிழர் மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இப்பட்டியலில் கிழக்கு மாகாண ஆளுநரும்,இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமான் இடம்பிடித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க... Read more »

இந்திய மீனவர்களை பிடிக்க முடியாத இலங்கை அரசு

இந்திய மீனவர்களை பிடிக்க முடியாத இலங்கை அரசு செங்கடலுக்கு கடற்படையை அனுப்புகின்றது என யாழ் மாவட்ட கிராமிய கடல் தொழில் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே சம்மேளன செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் கடற்றொழில் அமைச்சராக இருக்கும்... Read more »

மாயமான பல்கலைக்கழக மாணவன்

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தோணி கவிழ்ந்த நிலையில் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் தோணியில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது... Read more »