நாட்டின் சில பகுதிகளில் இரு நாட்களாக மின் தடை

நாட்டில் ஏற்பட்டுள்ள தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் கடும் காற்று, பலத்த மழையூடான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் இரு நாட்களாக மின் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந் நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த, மற்றும் அம்பகமுவ... Read more »

இளைஞர் மீது பொலிஸார் வாள்வெட்டு!!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ். தொல்புரம் மத்தியில் நேற்று இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் விசேட பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எனக்... Read more »

ஒரு கருவில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான... Read more »

திடீரென மயங்கி வீழ்ந்து ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். ஊரெழுப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 48 வயதுடைய சிங்கரத்தினம் சசிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்... Read more »

ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த ரணில்!

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று புதன்கிழமை  காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்  திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம்... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் அறிவிப்பு!

தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பரீட்சை செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14 ஆம்... Read more »

மரம் முறிந்து வீழ்ந்து இளம் தாய் மரணம்..!

குளியாப்பிட்டிய – மாதம்பே பிரதான வீதியில் சுதுவெல்ல பகுதியில் இன்று பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாதம்பே, கல்முருவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கல்முருவயிலிருந்து சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில்... Read more »

தம்புள்ளை தண்டர்ஸ் அணியுடன் தொடர்புடைய பங்களதேஷ் பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

LPL போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ்  அணியுடன் இணைந்து செயற்படும் பங்களதேஷ் பிரஜையான தம்மி ரஹுமான் என்ற நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (22) கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து,... Read more »

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு!

இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழந்துள்ளார். புத்துர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்... Read more »

யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் யுவதி மீது வாகனத்தால் மோதி உயிரைப் பறித்த இராணுவம்!

யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் யுவதி மீது வாகனத்தால் மோதி உயிரைப் பறித்த இராணுவம் பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று (20) உயிரிழந்துள்ளார். வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார். புத்துர் – கனகம்புளியடி வீதியில்... Read more »