
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று நேற்று (29.04.2024) கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கணவனை இழந்த குறித்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சூழலில் வாழ்வாதாரத்திற்காக... Read more »

போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஆதரித்து... Read more »

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாவாகும். ஒக்டேன் 95... Read more »

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என நிதி தொடர்பான குழு தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை... Read more »

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில்... Read more »

நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் உடலியல் தண்டனைகளை விதிப்பதை தடை செய்வதற்காக தண்டனைச் சட்ட கோவை மற்றும் குற்றவியல் வழக்கு கோவைச் சட்டங்களை திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு உறுப்பு நாடாக கையொப்பமிட்டுள்ள சிறுவர்... Read more »

தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்க தடை விதித்து, உயர் நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமனுவை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால... Read more »

அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 56 வயதான ஜெராட் சிசில் வாமதேவன் என்ற இலங்கையருக்கே அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த தண்டனை வழங்கியுள்ளது. இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி... Read more »

இலங்கைக்கும் கஸகஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் விமான மற்றும் வழிசெலுத்தல் அதிகாரிகளுக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட 13.5.2015 அன்று நடைபெற்ற... Read more »

எல்பிட்டிய – உரகஸ்மன்ஹந்திய, ரன்தொட்டுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 24 வயதுடைய திருமணமான பெண்ணொருவருடன்... Read more »