புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விஷேட பாதுகாப்பு..!!

புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது 14 ஆயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் குறித்த... Read more »

ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறையா??

எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வங்கி மற்றும் வணிக விடுமுறை என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அமைச்சகம் வரையறுக்காததால் மக்கள் குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விடுமுறை தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி... Read more »

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இன்றையதினம் 16 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இன்றையதினம் 16 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில்  மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 சிறைக் கைதிகள் இன்று(13)  காலை விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில்... Read more »

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் இன்றைய (13)  கச்சா எண்ணெய் விலை  91 டொலர்களாக உள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் கச்சா எண்ணெய்யின் விலை 90 டொலர்களை நெருங்கிய நிலையில் 1.70 டொலர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

மண்ணெண்ணெய் அடுப்பு வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மண்ணெண்ணெய் அடுப்பு வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பாணம், கொட்டடிப்  பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 3 ஆம் திகதி குறித்த குடும்பப் பெண்,  வீட்டில் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது ,... Read more »

கிளிநொச்சியில் வீடொன்றின் மீது மர்ம கும்பல் தாக்குதல்…!

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மதுபோதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீடு ஒன்றினை தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (12) 11மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி... Read more »

வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து, காருடன் மோதுண்டு விபத்து

வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து, காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவை அண்மித்த  A9 வீதி ரம்பாவ பகுதியில் நேற்று(12) மதியம் அதிசொகுசு பேருந்து எதிரே வந்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்த... Read more »

வவுனியாவில் இ.போ.ச பேருந்தினை வழிமறித்து தனியார் பேருந்தின் சாரதி தாக்குதல்

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்தின் சாரதி , நடத்துநர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தரித்து நின்ற சமயத்தில் அங்கு... Read more »

புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் 10 சிறைக்கைதிகள் விடுதலை…!

வவுனியா சிறைச்சாலையில் இன்றையதினம்(13) 10 கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் 10 சிறைக்கைதிகள் இன்று(13) காலை விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை... Read more »

மூதூர் குமாரபுரம் கிராமத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுடைய முதலை

மூதூர் -குமாரபுரம் கிராமத்திற்குள் இன்று(13) அதிகாலை முதலையொன்று உட்புகுந்துள்ளது. இம்முதலையானது சுமார் 8 அடி நீளமுடையதாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்முதலை கிராமத்திற்குள் உட்புகுந்ததையடுத்து கிராம மக்கள் பிடித்து முதலையை கட்டிப் போட்டிருந்தனர். அதைவேளை கந்தளாய் வனஜீவராசிகள் திணைகள அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் வழங்கியதையடுத்து... Read more »