ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பங்குபற்றும் நிகழ்வொன்று... Read more »
பண்டிகைக் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து, காலாவதியான இனிப்புகளை இறக்குமதி செய்து திகதிகளை மாற்றி விற்பனை செய்ய முயன்றவர்களுக்கு நுகர்வோர் அதிகார சபை... Read more »
திருகோணமலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனின் ஆவணங்கள் பரிசோதனை செய்த... Read more »
கிளநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ்வு க்காக கடந்த (05)திகதி சென்றிருந்த போது கிராம மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இதில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களை தாக்கியும் உள்ளார். இதுதொடர்பாக... Read more »
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று (06) காலை 10.30மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியாயூடாக யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஓமந்தை பன்றிகேய்தகுளம் பகுதியில் புகையிரத கடவையினை... Read more »
நாளை நாட்டில் அதிகளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. அதாவது நாளை (08) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, வட மத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல்,... Read more »
🔴வடக்கு உட்பட குறிப்பிட்ட பகுதிகளில் இன்றைய வெப்பநிலை மிகவும் ஆபத்தான நிலையில் ‼️ வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேல், வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பிரதேசங்களிலும் இன்று வெப்பநிலை அபாயகரமான மட்டத்திற்கு அதிகரிக்கும் என... Read more »
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவில் 2024ஆம் ஆண்டு பாதீட்டு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவும் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு பணியாளருக்கும் கூடுதலாக 10,000 ரூபாய்... Read more »
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பக் பௌர்ணமி தினமான ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.... Read more »
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதியிலிருந்து நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருக்கும் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குறித்த மூன்று நாள் விவாதத்திலேயே இவ்வாறு ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என... Read more »