ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு தீர்வு

ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரங்கன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மக்கள் போக்குவரத்து சேவை இன்றி அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், நீண்ட காலத்தின் பின் பேருந்து... Read more »

எமது ஆட்சியில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு…!தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார்…!

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸதாநாயக்க இன்று(16) பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த மாநாடு... Read more »

இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சியும், செயல்முறையும்

இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சியும், செயல்முறையும் இன்று  பரந்தன், பன்னங்கண்டி பகுதிகளில் நடைபெற்றது. கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சியில் விவசாயிகள் கமநலசேவை திணைக்களத்தினர், விவசாய போதனாசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கிளிநொச்சி மாவட்ட விவசாயப்பணிப்பாளர் இதன்... Read more »

வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் வைத்து நால்வர் கைது!

நேற்றையதினம் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து... Read more »

கிளிநொச்சியில் படைத்தரப்பு வசமிருந்த காணிகள் விடுவிப்பு…!

கிளிநொச்சி மாவட்டத்தில் படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகள் அதுசார்ந்த திணைக்களங்கள் மற்றும் மக்களுக்கு கையளிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.முரளீதரன் தெரிவித்தார். தொடர்ந்து இராணுவத்தினர் விடுவித்த கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட... Read more »

தமிழரசுக் கட்சியின் மகளீர் முன்னணி ஏற்பாடு செய்துள்ள மகளீர் தினம்

ஈழப் பெண்களும் இனியொரு பலமும் எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளீர் முன்னணி ஏற்பாடு செய்துள்ள  மகளீர் தினம் இன்று கிளிநொச்சி புனித திரேசாள் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் மாதர் முன்னணியின் தலைவி முறாளினி  தினேஸ் தலைமையில் நடைபெறுகின்ற... Read more »

மகளீர் தினத்தை முன்னிட்டு கர்ப்பவதிகளிற்கு அன்பளிப்பு பொதிகள்!

மகளீர் தினத்தை முன்னிட்டு கர்ப்பவதிகளிற்கு அன்பளிப்பு பொதிகள் இராணுவத்தினரால் இன்று வழங்கி வைக்கப்பட்டது. 55வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் 1500 ரூபா பெறுமதியான அன்பளிப்பு பொருட்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள 30 கர்ப்பவதிகளிற்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது. சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு 55வது படைப்பிரிவின்... Read more »

வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இலங்கையில் தென்னைப் பயிர்ச் செய்கையில் நோயை ஏற்படுத்தும் வெள்ளை ஈ பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் இன்று (05) கிளிநொச்சி விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் அம்பாள்குளம் பகுதியில்... Read more »

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏ9 வீதியில் மக்கள் ஊர்வலமாக சாந்தனின் உடல் ஊர்தியில் அஞ்சலி மண்டபம் வரை எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அஞ்சலிக்காக உடல் டிப்போ சந்தியில் அமைக்கப்பட்ட அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து மூத்த போராளி காக்கா ஈகைச்... Read more »

தமிழரசுக் கட்சியின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டது

தமிழரசுக் கட்சியின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2017ம் ஆம் ஆண்டு ஈழமக்கள் புரட்சிகர... Read more »