தொடரும் யுத்திக வேட்டை – 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது. இருவர் தப்பி ஓட்டம்!

யுத்திக எனும் தேசிய போதைப் பொருள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி உள்ளிட்ட இருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விசேட... Read more »

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் விபத்து – ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயம்!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »

இரணைமடு கமக்காரர் அரும்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர்.

இரணைமடு கமக்காரர் அரும்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர். தமக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே இன்று கையளித்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்ற விவசாயிகள் ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.... Read more »

சிறிதரன் துயிலுமில்லத்தில் அஞ்சலி!

தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றதை தொடர்ந்து வரவேற்பு இடம்பெற்றது. Read more »

வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

சமூக சேவைகள் அலுவல்கள்  திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் திணைக் களத்தின் ஒழுங்குபடுத்தலில் இன்றைய தினம் 19.01.2024 வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. வடமாகாணம் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு உணவு வழங்கலும் விநியோகமும் தொழில்துறையும்,... Read more »

கிளிநொச்சியில் பூசகருக்கு ஏற்பட்ட நிலை

கிளிநொச்சியில் பதினாறு வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பூசகர் ஒருவருக்கு எட்டு வருடங்களுக்கு பின் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பன்னிரெண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி பளைப் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம்... Read more »

துமிந்த சில்வாவிற்க்கு கோட்டபாய ராஜ பக்சவினால் வழக்கப்பட்ட தீர்ப்பு சட்ட ரீதி அற்றது….! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் குற்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்க்கு கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதி லயாக இருந்த காலப்பகுதியில்  வழங்கப்பட்ட பொது மன்னிப்பு  சட்டரீதியானது அல்ல  என இலங்கையில்... Read more »

போதைபொருள் வியாபாரம் செய்த கிராம சேவகர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற... Read more »

நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்பு

கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. விபத்தினால் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »

தொழிற்சங்க நடவடிக்கையால் சுகாதாரசேவைகள் ஸ்தம்பிதம்!!

அரசதாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் 48மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் பல்வேறு சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35000 ரூபாய்கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி  நாடளாவியரீதியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறைபோராட்டம்... Read more »