வேருடன் சாய்த்து சேதத்தை ஏற்படுத்திய மரம் அகற்றப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் A35 பிரதான வீதியில் கடந்த 29ம் திகதி இரவு பெய்த கடும் மழை காரணமாக 50 வருடங்கள் கடந்த பாரிய மரம் ஒன்று கடையின் மீது வேருடன் சாய்ந்துள்ளது. இதன் காரணமாக கடையின் சுவர்குதி... Read more »

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை  காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் தருமபுரம் பொதுச் சந்தையில் வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலையில் தேங்கியுள்ளது. இதனால் சந்தையில்  வியாபார... Read more »

கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்து வந்த நபர் மர்மமான முறையில் புகையிரத வீதிக்கு அருகில் சடலமாக மீட்பு …!

கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்து வந்த நபர் மர்மமான முறையில் புகையிரத வீதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  விநாயகபுரம் பகுதியில் கடந்த 31.12.2022  ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொலை சம்பத்துடன் தொடர்பு பட்டவர் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு கடந்த... Read more »

யாழ் பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்படுகின்றதா? அரசியல் ஆய்வாளர் சடடதரணி சி.அ.யோதிலிங்கம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீடத்தில் தமிழ் மொழி மூலக்கற்கை நெறியையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற குரல் இன்று மேலெழத்தொடங்கியுள்ளது. சட்டபீட மாணவர்களே இந்த விவகாரத்தை வெளி உலகிற்குக் கொண்டுவந்துள்ளனர். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் வரத்தொடங்கியுள்ளன. விரிவுரையாளர் இளம்பிறையன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுப்பல்கலைக்கழகமாக... Read more »

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதல்வராக இளவேந்தி நிர்மலராஜ் கடமைகளை பொறுப்பேற்றார்….!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதல்வராக இளவேந்தி நிர்மலராஜ் கடமைகளை இன்று பொறுப்பேற்றார். வடக்கு மாகாணத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி மாகா வித்தியாலயத்தில் முதல்வராக கடமையாற்றில ஜெயந்தி தனபாலசிங்கம் கடந்த 16ம் திகதியுடன் ஓய்வுபெற்றார்.  இந்த நிலையில் புதிதாக குறித்த பாடசாலைக்கு இளவேந்தி... Read more »

போசாக்கு குறைவான பிள்ளைகளுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

போசாக்கு குறைவான பிள்ளைகளுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று பகல் 2 மணியளவில் கிளிநொச்சி பாரதிபுரம் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. தெரிவு செய்யப்பட்ட போசாக்கு குறைவான 10 பிள்ளைகளுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதிகள் இவ்வாறு... Read more »

வடக்கு மாகாண ரீதியிலான தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான பூப்பந்தாட்டம்!

இன்போனிற்ஸ் (infonits) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் பூப்பந்தாட்ட போட்டி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக 2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண ரீதியிலான பூப்பந்தாட்ட போட்டியாக இது அமைந்தது. வடக்கு மாகாணத்தில் உள்ள 23 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசாங்கம்.

வலிந்து காணாமல் ஆக்கிய குற்றங்களை மேற்கொண்டுள்ளதை தாமே ஒப்புக்கொள்ளும் வகையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதி கோரி தாம்... Read more »

குற்றச்சாட்டை அரசால் நிரூபிக்க முடியவில்லை….! 3 தமிழர்கள் விடுதலை.

இலங்கையில் பணிபுரிந்த வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் இருந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். யோகராஜா நிரோஜன், சுப்ரமணியம் சுரேந்திரராஜா... Read more »

மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில்  மாவீரர்  துயிலுமில்ல  காணியை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல    காணியினை  விடுவிக்க கோரி மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து... Read more »