அம்பன் பகுதியில்  சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிப்பு, உழவு இயந்திரங்களும் விடுவிப்பு…!

பௌர்ணமி, மற்றும் ஞாயிறு விடுமுறை தினமான கடந்த 24/03/2024 அன்று மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் நேற்று திங்கட்கிழமை தலா ஒருலட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 24/03/2024  அன்று சிறப்பு அதிரடி படையினரால்... Read more »

யாழில் வாள்வெட்டு : வெட்டிய கையையும் எடுத்துச் சென்ற கும்பல்..!!!

யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன்  பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு  வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. ஞாயிற்றுக்கிழமை இரவு வாள்களுடன்  சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது... Read more »

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பரிதாப மரணம்..!

மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று  மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து... Read more »

வடக்கில் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்…!

வடமாகாணத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டையும் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் அதிக வாகன விபத்துக்கள் மற்றும் அதிக வாகன... Read more »

மட்டக்களப்பில் கோர விபத்து

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில்... Read more »

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். இன்று (29) முற்பகல் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாயக்க தெரிவித்தார். சிறைச்சாலையின் உணவகத்தில் இருந்து இருவரும் தப்பிச்சென்றுள்ளனர். தப்பிச்சென்ற கைதிகளைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். Read more »

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல்களைப் பெற அனுமதி!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடுக்குத்  திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள... Read more »

500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ்  சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை

500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ்  சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக முச்சக்கரவண்டி... Read more »

வீட்டில் தனிமையில் இருந்த பெண் படுகொலை

கடுவெல – கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நகரில் பணிபுரிந்து வரும் அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில்... Read more »

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத் தண்டனை..!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய  பட்டபெந்தி   4 வருட  கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்ட மா... Read more »