பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம்

நாட்டில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில், மதங்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, வழிபாட்டு தலங்களுக்கான அன்பளிப்புகளை வழங்கும் போதே கௌரவ ஆளுநர் இதனை கூறினார். வடக்கு மாகாண... Read more »

யாழ்ப்பாணத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக அமைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகுக்கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா டினேஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம்... Read more »

மழை வீழ்ச்சி 11ஆம் திகதிவரை அதிகரிக்க வாய்ப்பு – பிரதீபராஜா

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 11.01.2024 வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.... Read more »

பங்கமில்லா வாழ்வுபெறப் பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம்

தமிழ் மக்களின் தேசியத் திருநாட்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாகும். தொன்றுதொட்டு இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கல் இடம்பெற்று வந்துள்ளது.  ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து வருகின்றன. அலுமினியப் பானைகள் இயற்கையைப் போற்றுகின்ற... Read more »

யாழ்ப்பாண பொலிஸாரின் நிர்வாக ஊழலுக்கு நடவடிக்கை வேண்டும்

யாழ்ப்பாண பொலிசாரின் நிர்வாக ஊழல் மற்றும் பொதுமக்கள் சட்டத்தரணிகள் மீது  ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண விஜயத்தின் போது வட மாகாண ஆளுநர்... Read more »

கோர விபத்து -ஒருவர் பலி

மிஹிந்தலை பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அநுராதபுரம் – கலத்தேவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான இந்திரசிறி... Read more »

ஈழத்தமிழன் படைத்த உயரிய சாதனை

பொருட்களின் இருப்பிடத்தை கண்டறிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி சபேசன் சிதம்பர என்பரே இந்த சாதனையை படைத்துள்ளார். மருத்துவ பீடங்களில் இந்த தொழிநுட்பத்தை... Read more »

போராடி வென்றது இலங்கை அணி

சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (08) இந்த போட்டி நடைபெற்றது. அதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்று முதலில்... Read more »

யாழில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கைது

யாழ்ப்பணம் கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிசாரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று(08) சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த... Read more »

குடாரப்பு கடற்கரையில் பரபரப்பு-கரையொதுங்கிய புத்தர் சிலை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கிக்கொண்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் குறித்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும்... Read more »