இரு பேருந்துகள் மோதி கோர விபத்து! 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் வேவல்தெனிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

கொழும்பிலிருந்து சென்ற ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்..!

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணித்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெமட்டகொடை பகுதியில் வைத்து நேற்று மாலை 6.40 மணியளவில் இந்த கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதிக பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த ரயில் மீது கல் வீசி தாக்கியதில் பயணிகளுக்கு எந்த... Read more »

சம்பந்தனின் மறைவு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பு…!

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தனின் மறைவு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும் என சிறீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.   சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் 

சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளன. இதன்படி 355 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும். 420 ரூபாயாக நிலவிய... Read more »

இரா.சம்மந்தன் காலமானார்…!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இராஜவரோதயம் சம்மந்தன் நேற்று இரவு 9:00 மணியளவில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அவரது கொழும்பு இல்லத்தில் தனது 91 வது வயதில் கானமானார். அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்றம்... Read more »

பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே  இன்றைய தினம் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே  இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ 07 ஆம்... Read more »

இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழ்ந்துவிடும் அபாயம்

இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழ்ந்துவிடும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில், இம்மாதம் முதல் இருபத்தி இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை அரசாங்கம் உள்ளுர் திறைசேரி... Read more »

மாங்குளம் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு…!

முல்லைத்தீவு மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்... Read more »

மடுவில் அதிகாலையில் துயரம்…!

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜோதிநகர் இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று(29) அதிகாலை இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த விபத்தில் மன்னார் பெரியகமம்  பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளம் குடும்பஸ்தரே... Read more »

கிராம உத்தியோகத்தர்களின் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை இந்த வருடம் அதிகாரிகள் வழங்காவிட்டால் எதிர்வரும் தேர்தல்கள் பாதிக்கப்படலாம்

கிராம உத்தியோகத்தர்களின் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை இந்த வருடம் அதிகாரிகள் வழங்காவிட்டால் எதிர்வரும் தேர்தல்கள் பாதிக்கப்படலாம் என அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கம் எச்சரித்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் கலந்து கொண்டு கருதே தேசிய அமைப்பாளர் சுஜீவ... Read more »