மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி!

முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்து மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட போது கையும் களவுமாக சிக்கி உள்ளார். பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள்... Read more »

வரலாற்றில் முதன் முறையாக வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று  மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள்   ஓபின் இன்டர்நசினல் சிலம்பம் போட்டியில் இந்திய அணியுடன்  பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காக இலவசக் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் நோர்வேயில் வசிக்கும் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா அவர்களால்... Read more »

கொட்டோடை பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பும், அறநெறி பாடசாலை ஆரம்பமும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி  கிழக்கு கொட்டோடை. பிள்ளையார் ஆலய  பரிபாலன சபையினரால் தைப்பூசம் நன்னாளான  நேற்றையதினம் கல்விச்  சாதனையாளர்கள் 9 பேர் கௌரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆலய மண்டபத்தில் ஆலய பரிபாலன சபை தலைவர் சி.தா.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது. யா/... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நிகழந்திருக்கின்ற கிறிஸ்து புத்தாண்டு 2025 இல் நாட்டிலும், உலகெங்கிலும் சாந்தியும், சமாதானமமும் நிலைத்தோங்கவேண்டும் என்றும், மனங்கள் மாறி நல் ஏண்ணங்கள் மேலோங்க வேண்டும் என்றும், இலங்கை தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு... Read more »

அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் பாலன் பிறப்பு நல்வாழ்த்துக்கள்…!

பாலன் பிறப்பை இன்று கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் எமது இனிய பாலன் பிறப்பு நாள் நல்வாழ்த்துக்கள், இந்த நாட்டில் இந்த உலகில் சமாதானத்திற்க்காக அகிம்சைக்காக தன்னை மனிதனாக வெளிக்காட்டியவர்,  இந்நந்நாளில் அனைவருக்கும் சாந்தி சமாதானம் உண்டாகட்டும் அன்புடன் ஆசிரியர் Read more »

சிறப்பாக இடம் பெற்ற பொற்பதி றோ.க.த.க பாடசாலை ஒளிவிழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின்  ஒளி விழா நேற்றைய தினம்  (19/11/2024) பாடசாலை  அதிபர் சி. குகதாசன்  தலைமையில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து... Read more »

பண்ணிசை போட்டியில் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் தேசிய மட்டதில் முதலிடம்….!

அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட பண்ணிசைப் போட்டியில் யாழ் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் வரதகுலம் யக்சன் தேசிய ரீதியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக சாதனை... Read more »

பருத்தித்துறையில் இடம் பெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வு…! (வீடியோ)

யா/ பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தேலிக்க தமிழ் கலவன்  பாடசாலையின் மாணவர் பாராளுமன்றம் அமர்வு  பாடசாலை அதிபரும், மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான திரு.அரவிந்தன் தலைமையில் காலை 10:30 மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் இசை அணிவகுப்புடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டு ... Read more »

கோப்பாயில் பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் போராட்டம்!

கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் போராட்டம் ஒன்றினை 28.10.2024 முன்னெடுத்தனர். இதன்போது வீதி மறியலிலும் ஈடுபட்டனர். ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசண்டையீன செயற்பாடு, பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் தொலைபேசியில் இருத்தல், என பல குறைபாடுகளை முன்வைத்து பெற்றோர் போராடினர். வீதியை... Read more »

யாழ்ப்பாண பல்கலையில் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான உதவிக் கருத்தரங்கு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 2024 ஆம் ஆண்டு தோற்றவுள்ள கணித மற்றும் உயிரியல் விஞ்ஞான மாணவர்களுக்கான உதவிக் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் ஒக்டோபர் 26, 27 ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இரு... Read more »