
காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 12 பிரிவுகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு பின் இன்று சமையல் எரிவாயு வழங்கப்பட்டது. காரைதீவு மாளிகைக்காடு மாவடிப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட வினியோக அட்டையின் கீழ் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டது.... Read more »

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.... Read more »

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று – கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசிங்கம் சிறிதரன் என்பவரே இவ்வாறு... Read more »

மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர் அருள்மிகு குளக்கட்டு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு பெருவிழாவின் தீ மிதிப்பு நிகழ்வு நேற்றிரவு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தின் இவ்வருடத்திற்கான சடங்கு கந்த 2022.07.06 ஆம் திகதி ஆரம்பமாமாகியது. தொடற்சியாக 8 நாட்கள்... Read more »

மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு களுவான்கேணி கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 78 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கிழக்கு கடற்படையினர் நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல்களின் போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் பலநாள்... Read more »

மக்களின் தகவல்களை தெரிந்து கொள்ளும், அறிந்து கொள்ளும் உரிமைக்கு மதிப்பளித்துவரும் நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், லஞ்சம் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டுவரும் ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதானது இயலாமையின் வெளிப்பாடு என கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன... Read more »

நாட்டில் கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மையின் போது செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை... Read more »

அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று காலை நடைபெற்றது. இதன் போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டிருந்தனர். பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின்... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது. காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெருநாள் தொழுகையையும் பெருநாள் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் எம்.எம்.மன்சூர் மதனீ நடாத்தினார். தொழுகையில் பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர் Read more »

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று காலை நடைபெற்றது. சாய்ந்தமருது ஜாமியுல் இஸ்லாம் ஜூம்மாப்பள்ளி நிருவாக சபையினரின் ஏற்பாட்டில் அப்பிள் தோட்ட வீச்பாக்கில் பெருநாள் தொழுகையும் குத்துபாப் பிரசங்கமும் இடம் பெற்றது. மௌலவி எம்.எஸ்.எம்.சாதீகினால் குத்துபாப் பிரசங்கமும் பெருநாள் தொழுகையும்... Read more »