
இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டு 24 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரியுள்ள வன்னி மண்ணின் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்று, அவருக்கு நீதி வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடுபவரும் அவரது மனைவிவியுமான மாணிக்கம் சுப்பிரமணியம் 53, ... Read more »

தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களிடையே முரண்பாடு ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபுரம் – மணியங்குளம் வீதியில் குறித்த சம்பவம் 2.10.2024 இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றுக்கு வீதியோர மண்ணை... Read more »

எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய தமிழ்நாடு நாகை மாவட்த்தை சேர்ந்த 12 மீனவர்களையும் எதிர் 8/11/2024 மத திகதிவரை தடுப்பு காவலில் வைக்குமாறு கௌரவ பதில் நீதவான் குமாரசுவாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து... Read more »

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள். இலங்கை கடற்படையால் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. இந்தியா தமிழ்நாட்டிலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை இலங்கை... Read more »

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பதின்ம வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்று மாலை (24.10.2024) வியாழக்கிழமை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவான நிலையில் நீண்ட தேடுதலின் பின் நேற்று (24) இரவு... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. காலை 10.00மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட் தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின்... Read more »

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார தலமையில் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் ஏழாலை கிழக்கு, சுன்னாகத்தில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மேற்குறித்த பகுதியைச்... Read more »

சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது பனைமரங்களும், அவற்றை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர், காரைநகரில் இருந்து... Read more »

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு புதைகுழிகள் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. 11 வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியின் மாதிரிகளை வெளிநாட்டு... Read more »