களமுனையில் போராடி மண்ணிலே உறங்கும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவும் மக்களின் நிம்மதியும் சுதந்திரமும் மாத்திரமே.! வட்டுக்கோட்டையில்  வேந்தன்

களமுனையில் போராடி தாயக மண்ணிலே உறங்கும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவும் தாயக நிலப்பரப்பிலே மக்களின் நிம்மதியும் சுதந்திரமுமே என்று பரப்புரை கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான போராளி சி.வேந்தன் அவர்கள் கருத்துரைத்தார் ஜனநாயக... Read more »

கற்கோவளத்தில் கணவன் மனைவி இருவர் மரணம், கொலை என சந்தேகம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடுபவரும் அவரது மனைவிவியுமான மாணிக்கம்  சுப்பிரமணியம் 53, ... Read more »

வட்டுக்கோட்டையில் கோர் விபத்து – ஒருவர் படுகாயம்!

இன்றையதினம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து சங்கரத்தை பக்கமாக 200 மீட்டர் தூரத்தில் வைத்தியர் ஒருவருடைய காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக... Read more »

தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்கள் ஆதரிப்பது அர மடைமைத்தனம் – ஐங்கரநேசன்

ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர். இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர். இதனை ஏற்பாடு... Read more »

கோப்பாயில் பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் போராட்டம்!

கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் போராட்டம் ஒன்றினை 28.10.2024 முன்னெடுத்தனர். இதன்போது வீதி மறியலிலும் ஈடுபட்டனர். ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசண்டையீன செயற்பாடு, பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் தொலைபேசியில் இருத்தல், என பல குறைபாடுகளை முன்வைத்து பெற்றோர் போராடினர். வீதியை... Read more »

ஜேவிபியினர் மிகவும் நல்லவர்கள் – கஜதீபன் தெரிவிப்பு!

ஜேவிபியினர் மிகவும் நல்லவர்கள். ஏனென்றால் உண்மையான விடயங்களை அவர்கள் பகிரங்கமாக சொல்கின்றார்கள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் கஜதீபன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (28) மூளாய் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

தென்னிலங்கைவாசிகள் நாட்டிய விஷச்செடி தமிழ் தேசிய கூட்டமைப்பை சீர்குலைத்து விட்டது – சுரேந்திரன் ஆதங்கம்!

எமது ஒற்றுமையை குலைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நாட்டப்பட்ட விஷச் செடிகள் தற்போது விருட்சமாகி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைத்து விட்டது என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மூளாயில் நடைபெற்ற தேர்தால் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே... Read more »

சென்மேரிஸ் உள்ளூர் மென்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம் Rising Star அணி வசம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் வடமராட்சி கிழக்கு கழக வீரர்களை உள்ளடக்கி நடாத்தப்பட்ட  மென்பந்தாட்ட தொடர் KSPL-05 இறுதி போட்டி நேற்று  (26.10.2024) சனிக்கிழமை இடம்பெற்றது. சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் தலைமையில் விருந்தினர்கள் மாலை அணிவித்து மண்டபம் நோக்கி... Read more »

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரை வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் ஆரம்பம்…!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளரும்,  ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான சி.வேந்தன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரை நடவடிக்கைகள்  இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. முன்னாள் போராளிகள் மற்றும் வடமராட்சி கிழக்கு... Read more »

எல்லை  தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது…!

எல்லை தாண்டி  இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள். இலங்கை கடற்படையால் இன்றிரவு  கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. இந்தியா தமிழ்நாட்டிலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை  இலங்கை... Read more »