தமிழீழம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தால் இலங்கையின் தென்பகுதி காசாவாக மாறியிருக்கும்! – விமல்

தமிழீழம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தால் தெற்காசியாவின் காசாவாக இலங்கையின் தென்பகுதி மாறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பாலஸ்தீன பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது. குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

முல்லைத்தீவு நகரை சுற்றி நோட்டமிட்ட உலங்கு வானூர்தி!

முல்லைத்தீவு நகரை சுற்றி உலங்கு வானூர்தி மூலம் இலங்கை விமான படையினர் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஒவ்வொரு வருடமும் தமிழின அழிப்பு நாளான மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களை, மக்கள் நினைவு கூருகின்றனர். ஒவ்வொரு வருடமும்... Read more »

தமிழ் மக்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு பஞ்சமில்லை” வெளியானது புதிய அறிக்கை.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு இன்னும் பஞ்சமில்லை என சர்வதேச அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்ட இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டம் வெளியிட்டுள்ள (ITJP) புதிய அறிக்கையில், உள்நாட்டுப் போர்... Read more »

23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்கள்!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 899 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 397 பேரும், மத்திய மாகாணத்தில்... Read more »

துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

கொழும்பு – ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் அட்சய... Read more »

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட மூவர் 14 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஐஸ் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் இன்று (10) தெரிவித்தனர். வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எச்எம்.ரிஸ்வி... Read more »

இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் சட்டம்

வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக ஒருவர் பொலிஸாருக்கு அழைக்கப்படும் போது, ​​அந்த நபர் கேள்வி எழுப்பினால் அழைப்பிற்கான காரணத்தை உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில்... Read more »

துரிதமாகும் மைத்திரிக்கு எதிரான விசாரணைகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலத்தை விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்குமாறு  குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (10) உத்தரவிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்... Read more »

69 இலட்சம் மக்கள் இன்னும் எங்களுடன்! இளம் தலைமைக்கு வாய்ப்புக்கள் கட்டாயம்- பசில்

இளம் தலைமைக்கு வாய்ப்புக்கள் கட்டாயம் வழங்குவோம் எனவும்  இன்னும் 69 இலட்சம் மக்கள் எங்களுடன் இருக்கிறார்களா இல்லையா என தேர்தலை வைத்து தான் பார்க்க வேண்டும்   எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல்... Read more »

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி..!

உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவில் சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது தவிர, சைப்ரஸ்... Read more »