யாழ் பல்கலையில் 6 விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகபதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று (30) சனிக்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து மதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதி பெற்ற 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களின் விபரங்கள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடைமுறைகளுக்கமைய அந்தந்த விண்ணப்பத் தினங்களில் இருந்து பேராசிரியர்களின் பதவி உயர்வைப் பேரவை அங்கீகரித்துள்ளது. அதன் படி, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து சத்திர சிகிச்சைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணருமான வைத்திய கலாநிதி... Read more »

மிகமோசமான இனவாதி தலைமையில் ஒரு செயலணி..!சுரேஷ் பிரேமசந்திரன்.

இந்த நாட்டிலுள்ள மிக மோசமான இனவாதியை கொண்டு “ஒரே நாடு ஒரே சட்டம்” என்று சொல்லுமாறு சொன்னால் தமிழ், முஸ்லிம் மக்களை இந்த நாட்டிலிருந்தே விரட்டியடிப்பது, அவர்களுக்கு எதுவுமே செய்யாமல் விடுவதுமே நோக்கமாகும். மேற்கண்டவாறு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்... Read more »

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது பாலியல் பலாத்காரம்! 17 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்த நீதிமன்றம்.. |

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயதான குற்றவாளிக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்கி கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் மூன்று இலட்ச ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதுடன் அதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் இரு வருடங்கள் சிறைத்தண்டனை... Read more »

இந்தியாவில் கைது செய்யப்பட்ட வடமராட்சி மீனவர்களை விடுவிக்க கோரிக்கை.(வீடியோ)

இந்தியாவில் கைது செய்யப்பட்ட வடமராட்சி மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உடனடியாக இழுவை மடி தடை சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்றும் வடமராட்சி மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   இன்று வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு, சங்கங்களின் சமாசத்தில் இடம் பெற்ற... Read more »

இந்திய தூதுவருக்கும் இரா.சம்பந்தனிற்கும் இடையில் அவசர சந்திப்பு!

இந்தியத் தூதுவர் கோபால் பால்கிலே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும் இடையில் இன்று மாலை அவசர சந்திப்பு இடம்பெற்றது. கொழும்பில் இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இச் சந்திப்பில் தூதுவர் கோபால் பால்கிலேயுடன்  அவரது அதிகாரியும் இரா.சம்பந்தனுடன்... Read more »

யாழ் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையினால் 40 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையினால்  கடந்த 24 மணி நேரத்திற்குள் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 09 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்  உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.... Read more »

பிள்ளைகளைகொன்ற பின் ஆற்றில் பாய்ந்த இலங்கைப் பெண்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு ஆற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இத்தாலியின் வடக்கு வெனெற்றோ பிராந்தியத்தில் (Veneto region) Verona நகரில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.... Read more »

ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வேலணையில் போராட்டம்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வேலணையில் அதிபர் ஆசிரியர்கள் சம்பளமுரண்பாட்டை நீக்ககக்கோரி இன்று அதிபர் ஆசிரியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆசிரியர்களின் போராட்டமானது. வேலணை சரஸ்வதி வித்தியாசாலை முன்பாக நடைபெற்றது . அரசுக்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு அதிபர்கள்... Read more »

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு 31 அதிகாலை நீக்கம்!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு 31 ஆம் திகதி அதிகாலை நீக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட் செயலணியில் முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது. இதில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டது. பொது... Read more »

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு பயிற்சி மருத்துவர்கள் நியமனம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு பயிற்சி மருத்துவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு வைத்திய அத்தியட்சகர் திலீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனனும், சிறப்பு விருந்தினர்களாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »