வடக்கிற்க்கு 253 வைத்தியர்கள்புதிதாக நியமனம்….

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 62 வைத்தியர்கள் உட்பட வடமாகாணத்தில் 253 வைத்தியர்  நியமனங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் நீண்ட காலமாக வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வந்தது. குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில்... Read more »

வீதி புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் பணிப்பு !

ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட 17 வீதிகளின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் வி.மணிவண்ணன் பணிப்புரை விடுத்தார். இது தொட‌ர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ் மாநகர முதல்வர் தலைமையில் 22.10.2021 அன்று யாழ் மாநகர சபையில்... Read more »

மன்னாரில் விவசாயிகள் போராட்டம்…!

விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் நேற்றைய தினம் திங்கட்கிழமை(25) காலை 10.30 மணியளவில் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய... Read more »

வவுனியா பல்கலைக்கழகத்தில் 600 மரக்கன்றுகள் நாட்டிவைப்பு…!

வவுனியா பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (25) காலை இடம்பெற்றுள்ளது. ? மாருதம் பசுமை இயக்கத்தின் 6வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாருதம் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் 600 மரக்கன்றுகள் நாட்டிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில்... Read more »

வடமராட்சி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டம்.

வடமராட்சி வலயத்திற்குட்பட்ட அதிபர் ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரி நேற்று (25/10) போராட்டத்தில ஈடுபட்டனர். இதனை  இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இப் போராட்டத்தில் வடமராட்சி வலயத்திற்க்கு உட்பட்ட அதிபர் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர். Read more »

வல்வெட்டித்துறைச் சைவ மீனவர்களை இந்தியாவிடம் பிடித்துக் கொடுத்த தமிழரசுக் கட்சி..! மறவன்புலவு க சச்சிதானந்தன்.

  வல்வெட்டித்துறைச் சைவ மீனவர்களை இந்தியாவிடம் பிடித்துக் கொடுத்த தமிழரசுக் கட்சி என சிவசேனை தலைவர் முனைவர்  மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.   வல்வெட்டித்துறை மீனவர் இருவர் தமிழகக் கரையோரத்தில்... Read more »

யாழ்.சாவகச்சோியில் பாழடைந்த கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு! |

யாழ்.சாவகச்சோியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருக்கின்றது.  கிணற்றை துப்புரவு செய்தபோதே கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். கிணற்றில் சந்தேகத்துக்கிடமான கட்டப்பட்ட உரப்பை இருப்பதை துப்பரவு செய்தவர்கள் அவதானித்தனர். இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து... Read more »

வவுனியாவிலும் ஆரம்ப பாடசாலைகள் ஆரம்பமாகின….!

கொரனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நீண்ட காலத்திற்கு பின்னர் ஆரம்ப பிரிவு மாத்திரம் இன்று ஆரம்பமாகின. பாடசாலைகளுக்கு கணிசமான மாணவர்கள் வருகை தந்திருந்ததுடன் அதிகளவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் இரு பிரிவுகளாக மாணவர்களை பாடசாலைக்கு வருமாறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருந்தது. சுpல மாணவர்கள் சீருடை... Read more »

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடாத்தப்பட் தாக்குதலை கண்டித்து நாடளவிய ரீதியில் இந்து ஆலையங்களுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் –இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் சி.வரதநிரோசன்–

பங்களாதேசில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நாட்டிலுள்ள இந்து ஆலையங்களல்; ஆத்மசாந்தி வேண்டி... Read more »

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் 11வது நிர்வாக அதிகாரியாக குமாரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றார்..! |

நல்லுார் கந்தசுவாமி ஆலய 11வது நிர்வாக அதிகாரியாக குமாரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுள்ளார்.  நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார். அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் ஷயந்தன... Read more »