
கடற்படையினரின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம். கடற்படையினரின் படகு மோதியதில் இந்தியாவின் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கீரன் என்னும் மீனவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்திய மீனவர்களின் படகு ஒன்று காரைநகர் கோவலம் கடற்பரப்பிற்குள் உள் நுழைந்த சமயம் அதனை... Read more »

வடமாகாண 18, 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர்... Read more »

18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய... Read more »

பூநகரி பிரதேச மக்களின் தேவைகள் தொடர்பில் இன்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரனிடம் இவ்வாறு மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில்,நாட்டில் ஏற்ப்பட்ட யுத்தத்தின் பின் மக்கள் தமது... Read more »

இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி என சிவசேனை அமைப்பின் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத இந்திய இழுவை மடி படகுகளின் வருகையினை நிறுத்த கோரி இன்று நடாத்தப்பட்ட போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடகடல் என்பது பாக்குநீரிணை,தென்கடல் என்பது... Read more »

இந்தியமீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து முன்னெடுக்கும் பாரிய கண்டண போராட்டமானது இன்று (17) காலை 7 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகிய படகுகளில் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இழுவைப்படகு தடைச்சட்டத்தினை அமுல்படுத்த கோரியே இன்று முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான படகு... Read more »

நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்படும் நிலைமையானது இலங்கையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்படுவது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்களவு பாதக நிலையை உருவாக்கும் என தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மனித மூலதனத்தில் ஏற்றத்... Read more »

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறங்கியாமடு புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தமது வழமையான வீதி போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையை கண்டித்தும் போக்குவரத்திற்கு விடுமாறு கோரி பிரதேச மக்களினால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. புகையிரத கடவை... Read more »

மிக நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில், அதிபர், ஆசிரியர்கள், அரசாங்கம் மற்றும் மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு சாதகமான தீர்வை முன்வைக்காது பாடசாலைகளை மீள திறப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டார்களா என்று அரசாங்கத்தை கேட்க விளைகின்றோம் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்குள், வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இடதுகையால் கொடுப்பது வலது கைக்கு தெரியாது என்ற நிலைமையே நாட்டில் தற்போது நீடித்து... Read more »