நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 13 வரை நீடிப்பு ….!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சற்றுமுன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல்... Read more »

மேலும் 204 மரணங்கள் பதிவு;

– 109 ஆண்கள், 95 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 149 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 204 மரணங்கள் நேற்று முன்தினம்  (01) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல்... Read more »

சஹ்ரானின் சகோதிரி உள்ளிட்ட 64 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 64 பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் இன்று(2) உத்தரவிட்டுள்ளார். காணொளி மூலமாகவே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். Read more »

ரிஷாட்டின் சிறையில் சிக்கிய முக்கிய பொருள்! –

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கையடக்கத் தொலைபேசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க... Read more »

நாட்டில் பொது இடத்தில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் கைது!

பலாங்கொடை, பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதனை காணொளியாக பதிவுசெய்து ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களைத் பொலிஸார் தேடிவந்த நிலையில் அவ்வாறு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு,... Read more »

கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கைதடி முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் சுமார் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இல்லத்தில் உள்ள... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவானது.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிராகாஷ் (வயது26) மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்.நெடுந்தீவை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர், பருத்தித்துறையை சேர்ந்த 72 வயதான ஆண்... Read more »

அனலைதீவில் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! 5 பேருக்கு தொற்று.. |

யாழ்.தீவகம் அனலைதீவில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரு கர்ப்பவதிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிரப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான 30 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதன்போது குறித்த தொற்றாளர்கள் அடையாளம்... Read more »

அக்டோபர் மாத இறுதியுடன் எல்லாம் அடங்கிவிடும்! ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.. |

நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணிகள் மிக துரிதகதியில் இடம்பெற்றுவரும் நிலையில் அடுத்துவரும் அக்டோபர் மாத இறுதியில் தொற்று முற்றாக குறையும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் சந்திம ஜீவசுந்தரன கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கொரோனா நிலவரம் தொடர்பாக கருத்து... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தனது கடமையை பொறுப்பேற்கிறார்!

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மீண்டும் தனது பதவியை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாவட்டத்தில் நிலவும் மிக நெருக்கடியான நிலையினை கருத்திக் கொண்டு அவர் தனது பதவியை மீள பொறுப்பேற்கவுள்ளார். பிரிட்டனில் மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி மாதத்தின் ஆரம்பித்தில் சென்றிருந்த அவர், தனது பொறுப்பை... Read more »